கருவின் பாலினம் அறிவது கடுமையான குற்றம். பாலினத்தை அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள், ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும். பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக யூடியூபர் இர்பானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்குமாறு வலையொளி தளத்திற்கும், கணினி குற்றப்பிரிவிற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.