மறைந்த ஈரோடு எம். பி அ. கணேசமூர்த்திக்கு புகழ் அஞ்சலி கூட்டம்

63பார்த்தது
மறைந்த ஈரோடு எம். பி அ. கணேசமூர்த்திக்கு புகழ் அஞ்சலி கூட்டம்
இந்தியாவில் காங். , ஆட்சி அமைந்தால், விவசாயிகளின் முகத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறோம் என்று ஈரோட்டில் பாரத கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் பேட்டியளித்தார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கெயில் குழாய் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவல்பூந்துறையில் உள்ள பிரணாவ் திருமண மண்டபத்தில், மறைந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்திக்கு புகழ் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பாரத கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், பஞ்சாப் பசவராஜ், கர்நாடகா பி. டி ஜான், கேரளா முத்து விசுவநாதன், ஈசன், அரச்சலூர் செல்வம், ராமசாமி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பெ. மு குழந்தைவேலு, சுபி தளபதி, வெயில் எரிக்காற்று குழாய் எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மு. கோபால், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் லோகநாதன் உட்பட தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்பு குழு நிர்வாகிகள், விவசாய பெருமக்கள் என பலர் பங்கேற்றனர்.
மறைந்த அ. கணேசமூர்த்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பாரத கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் உள்ளிட்ட இந்திய அளவில் பங்கேற்ற விவசாய பெருமக்கள் பேசினர்.

,

தொடர்புடைய செய்தி