ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 2,36,680 பறிமுதல்

5359பார்த்தது
ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சத்து 36 ஆயிரத்து 680 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஈரோடு குமலன் குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ் வழியாக காரை சோதனை செய்தனர்.

அப்போது காரில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 680 ரூபாய் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டது தெரிய வந்தது. அவர் குமலன் குட்டையை சேர்ந்த சசிக்குமார் என்பதும் டயர் விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட தொகையை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி