கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் குமரனின் 121 வது பிறந்தநாளை ஒட்டி முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் கோபி நகர கிழக்கு மற்றும் மேற்கு கிளை சார்பில் திருப்பூர் குமரனின் 121 வது பிறந்தநாள் விழா கோபி பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ செங்கோட்டையன் கலந்துகொண்டு திருப்பூர் குமரனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சருக்கு ஏ.செங்கோட்டையன் இனிப்புகளை வழங்கினார். பின்னர் அதிமுக தொண்டர்கள் திருப்பூர் குமரனுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்