ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 8 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நிலவரம்: விலை- கிலோவுக்கு மல்லிகை: 800/1080 முல்லை: 800/1200 காக்கடா: 750/1100 செண்டு: 30/130 கோழி கொண்டை: 12/55 ஜாதி முல்லை: 750/1000 கனகாம்பரம்: 400 அரளி: 130 துளசி: 60 செவ்வந்தி: 200