பழமையான மரத்தை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் உயிர்பித்தனர்

78பார்த்தது
ஈரோட்டில் கோடை வெயில் தாகத்தை உணர்ந்து பழமையான மரத்தை வேருடன் அகற்றி மாற்று இடத்தில் உயிர்பித்த தனியார் தொண்டு அமைப்பின் சேவை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக ஈரோடுமாவட்டத்தில் நாளுக்கு நாள் 100டிகிரியை கடந்த வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் முன்பு இல்லாத வகையில் கோடை வெயிலால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்றஉணர்வு மக்கள் மத்தியில் மேலோங்கி வருகிறது. இந்த சூழலில் திண்டல் பகுதியில் சாலையோரம்உள்ள 25ஆண்டுகள் பழமையான அரச மரத்தினை சாலை விரிவாக்க பணிக்காக அப்புறப்படுத்த திட்டமிட்ட நிலையில் அந்தமரத்தினை வேரோடு அப்புறப்படுத்த சிறகுகள் அமைப்பினர் திட்டமிட்டனர். அப்போது ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு 5மணி நேர போராட்டத்திற்கு வேரோடு மரத்தினை எடுத்து10கி. மீ தொலைவில் உள்ள நசியனூர் பகுதியில் உள்ள நந்தவனத்தில் தனியார் அமைப்பினர் வைத்து மரத்திற்கு மறுவாழ்வு கொடுத்தனர். இதனால் வெயில்தன்மை உணர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை பாதுகாக்க வேண்டும்என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த முயற்சியில் இறங்கியதாக தனியார் அமைப்பினர் தெரிவித்தனர். மேலும் இதுபோன்று மரத்தினை வேரோடுஎடுத்து வைக்க மாவட்ட நிர்வாகம் போதுமான ஜேசிபி உபகரணங்கள் வழங்கினால் பழமையான மரங்கள் பாதுகாக்கப்படும்என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்தி