திருச்சி மாநாடு என் டி ஏ கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு: வாசன்.

64பார்த்தது
திருச்சி மாநாடு என் டி ஏ கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு: வாசன்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் பெருந்துறைக்கு வருகை தந்தார். மாவட்டத் தலைவர் சண்முகம், பொருளாளர் மோதிலால் நேரு, மாணவர் அணி தலைவர் பர்சன், மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் தோப்பு சந்திரசேகர், மாவட்ட இளைஞரணி யுவராஜா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பின்னர் ஜி கே வாசன் பேசியபோது பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 14ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாபெரும் மாநாடாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் என்டிய கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நிர்வாகிகள் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலரும் திரளாக கலந்து கொள்கின்றனர். சுமார் 25, 000 பேர் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாவட்டம் தோறும் நிர்வாகிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்றார். ஈரோடு அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். தற்போது கேரளாவில் அமீபா வைரஸ் பரவலால் மூளை பாதிப்பு ஏற்பட்டு மூன்று பேர் இறந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள குடிநீர் நீர் நிலைகள் மற்றும் குளங்களை சுகாதாரத் துறையின் சார்பில் உடனடி ஆய்வு செய்ய வேண்டும். எனவும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

தொடர்புடைய செய்தி