ஊத்துக்குளியில் இன்று "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" முகாம்.

64பார்த்தது
ஊத்துக்குளியில் இன்று "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" முகாம்.
ஊத்துக்குளி தாலுகாவில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது என ஊத்துக்குளி தாசில்தார் சரவணன் தெரிவித்துள்ளார். இவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது.

உங்களைத்தேடி உங்கள் ஊரில், திட்டத்தின்கீழ் மாவட்ட அளவிலான அலுவலர்கள் இன்று வியாழக்கிழமை ஊத்துக்குளி தாலுக்கா அலுவலகம் மற்றும் குன்னத்தூர் , ஊத்துக்குளி மற்றும்  ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இன்று   வியாழக்கிழமை காலை 9 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை மாவட்ட ஆட்சியர், மாவட்ட அளவிலான உயர்நிலை அலுவலர்கள் கள ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர். பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுவாக கொடுத்து தீர்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஊத்துக்குளி தாலுகா அலுவலகம் , செங்கப்பள்ளி, காவுத்தம்பாளையம், வெள்ளிரவெளி உட்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்வார் என தெரிய வருகிறது.

தொடர்புடைய செய்தி