அந்தியூர் - Anthiyur

சத்தியமங்கலத்தில் லாட்டரி விற்பனை செய்தவர் கைது

சத்தியமங்கலத்தில் லாட்டரி விற்பனை செய்தவர் கைது

தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனையை தடுக்க, போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சத்தியமங்கலம் கொட்டுவீரம்பாளையத்தில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சிக்கிம் குயில் என்று அச்சிடப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கொழிஞ்சனூரைச் சேர்ந்த மூர்த்தி (45) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 650 பறிமுதல் செய்தனர்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా