அந்தியூர் - Anthiyur

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சித்தோடு அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த முதியவரை பவானி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 69; கூலித் தொழிலாளி. இவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சுப்பிரமணி சிறையில் அடைக்கப்பட்டார்.

வீடியோஸ்


రాజన్న సిరిసిల్ల జిల్లా