பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

74பார்த்தது
பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
ஈரோடு-அந்தியூர்
30. 4. 24
செய்தியாளர்; எஸ். திருபாலா.


வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவருக்கு ஈரோட்டை சேர்ந்த குருதேவ் என்பவர் மூலம், ஈரோடு பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார், 36, என்பவர் அறிமுகமானார்.

இவர் சென்னை தலைமைச் செயலகத்தில்
மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும், அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி, அங்கமுத்துவிடம், 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு தலைமுறைவானார்.

வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான ராஜேஷ்குமார் மீது அங்கமுத்து அந்தியூர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமாரை தேடி வந்த நிலையில் சென்னையில் ராஜேஷ் குமார் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து,
ராஜேஷ்குமாரை கைது செய்து அந்தியூர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வாலிபர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி