இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்- ரகுபதி

70பார்த்தது
இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்- ரகுபதி
தவறான தகவல்களையும், தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், "திருவெண்ணெய்நல்லூரில் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த சம்பவம் குறித்து முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் அவசரகதியில் வழக்கம்போல ஓர் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். உயிரிழந்த ஜெயராமன் அதிகளவு மதுப்பழக்கம் உள்ளவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை கள்ளச்சாராய மரணம் என்று கூறி இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடப்பார்க்கிறார் இபிஎஸ்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி