முன்னாள் நீதிபதி கங்கோபாத்யாய்க்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

51பார்த்தது
முன்னாள் நீதிபதி கங்கோபாத்யாய்க்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கருத்து தெரிவித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கங்கோபாத்யாய்க்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவரை 24 மணி நேரமும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரச்சாரக் கூட்டங்களில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று கங்கோபாத்யாய்க்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கங்கோபாத்யாய் மம்தா பானர்ஜி குறித்து கடுமையாக பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி