200 முறை தோப்புக்கரணம்.. மயங்கிய கல்லூரி மாணவிகள்

51பார்த்தது
200 முறை தோப்புக்கரணம்.. மயங்கிய கல்லூரி மாணவிகள்
ஆந்திர மாநிலம் சீதாராமா ராஜு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கல்லூரியில், கிருஷ்ணகுமாரி முதல்வராக பணியாற்றுகிறார். தனது பேச்சை கேட்கவில்லை என கூறி 50 மாணவிகளை 3 நாட்கள் 200 முறை தோப்புக்கரணம் போடவைத்துள்ளார். இதில், மயங்கிய மாணவிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியபோது, கல்லூரி முதல்வர் தங்களை கழிவறையை சுத்தம் செய்யச் சொல்கிறார், உடனே அவரை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி