பல உணவகங்கள் மற்றும் திருமணங்களில் நின்று கொண்டு சாப்பிடும் முறை பரவி விட்டது. நின்றபடி சாப்பிடும் போது உணவுகள் செரிமான மண்டலத்திற்குள் செல்லும் வேகம் அதிகரிப்பதால் குடலில் அழுத்தத்தை உண்டாக்கி செரிமானத்தில் சிக்கல் ஏற்படும். நின்றபடி உண்பதால் உணவு வேகமாக கீழே செல்கிறது, இதனால் அதிகம் சாப்பிட தூண்டும். தரையில் உட்கார்ந்து சாப்பிடுபவர்களுக்கு செரிமானம் சீராக இருப்பதோடு தவறான நேரங்களில் பசி எடுத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாது.