ஆபாச செயலியில் பழகிய புது மாப்பிள்ளை மீது தாக்குதல்

32016பார்த்தது
ஆபாச செயலியில் பழகிய புது மாப்பிள்ளை மீது தாக்குதல்
கோவையை சேர்ந்த மென்பொறியாளரான 30 வயது வாலிபர் ஆபாச செயலியை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் சாட்டிங் செய்தபோது வாலிபர் ஒருவர் தனிமையில் சந்திக்க விரும்புவதாக கூறியுள்ளார். அவரை சந்திக்க கடந்ததினம் சரவணம்பட்டி தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் சென்றுள்ளார். அங்கே வந்த வாலிபர் அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். புதர் மறைவில் மறைந்திருந்த மற்றொரு வாலிபருடன் இணைந்து மென் பொறியாளரை தாக்கி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணம் இல்லை எனக் கூறியபோது அவரது ஆடைகளை களைந்து மிரட்டியுள்ளனர். தொடர்ந்து அவரது செல்போனை பறித்து அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட வாலிபருக்கு இன்னும் 3 நாளில் திருமணம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி