நிர்மலா தேவி வழக்கில் வரும் 26ஆம் தேதி தீர்ப்பு

67பார்த்தது
நிர்மலா தேவி வழக்கில் வரும் 26ஆம் தேதி தீர்ப்பு
மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கு விசாரணையில் வரும் 26ஆம் தேதி கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்திவருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளது என அரசு தரப்புபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருக்கிறார்களா என விளக்கமளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி