சென்னையில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய 60 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை இந்த எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மின்னகத்தை அணுகி சீரான மின்சாரம் பெறலாம் என தெரிவிவிக்கப்பட்டுள்ளது.