வணங்கான் பெயரை பயன்படுத்த இயக்குநர் பாலாவுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணங்கான் பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. வணங்கான் என்ற தலைப்பை ஏற்கனவே பதிவு செய்ததால் தடை கோரி ஆரஞ்சு புரொடக்ஷன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் மனு அளித்திருந்தார். வணங்கான் திரைப்படம் ஆகஸ்ட் இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.