திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாகையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம், நாகையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்ட வீடு, வைவேஸ்புரத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ. 9. 00 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நர்சரி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வேடசந்துார் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், குமரன், துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.