எதிரில் இருந்த கடைக்குள் புகுந்த பேருந்தால் பரபரப்பு

1924பார்த்தது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து தேனி செல்வதற்காக சுப்ரமணி என்ற ஓட்டுநர் திங்கட்கிழமை மதியம் 1. 42 மணியளவில் பேருந்தை இயக்க முயன்று வெளியே வந்த போது பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த ஸ்வீட் கடையில் அரசு பேருந்து பிரேக் பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது. இதனால் கடைக்குள் இருந்த பெண் காயம் அடைந்து அருகில் இருந்தவரின் உதவியோடு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும் கடையில் இருந்த கண்ணாடி பொருட்கள் மற்றும் ஸ்வீட்டுகள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் அரசு பேருந்தை பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் பேருந்து நிலையத்திற்கு எடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் அனைத்தும் தகர டப்பா பேருந்துகளாக நிலவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகி வருகிறது. கடந்த வாரம் அரசு பேருந்து பழனியில் சக்கரம் கழண்டு ஓடியது இதனால் பயணிகளின் உயிர் மயிரலையில் தப்பியது. அதேபோன்று தற்போது அரசு பேருந்து பழுதடைந்து பிரேக் பிடிக்காமல் கடைக்குள் புகுந்து இருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி