திண்டுக்கல்: கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி

4417பார்த்தது
திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை பகுதியில் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி.

திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்துறை எம்ஜிஆர் நகரில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு தரப்பினருக்கு குலதெய்வமாக இருந்து வருகிறது. அவர்கள் முத்தழகு பட்டியில் வசித்து வரும் நிலையில் கோவிலை பாண்டி என்பவர் கவனித்து நேற்று இரவு மர்ம நபர்கள் இரண்டு பேர் கோவில் முன்பு இருந்த வேலை எடுத்து உண்டியலை உடைக்க தொடங்கி உள்ளனர்.

சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் எழுந்து வரவே கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இதுகுறித்து புதன்கிழமை காலை 11 மணி அளவில் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி