குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என சாலை மறியல்

78பார்த்தது
குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என சாலை மறியல்
வேடசந்தூா் அருகே குடிநீா் வழங்க கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூத்தாம்பட்டி வஉசி நகரைச் சோ்ந்த பொதுமக்களுக்கு கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடா்பாக ஸ்ரீராமபுரம் ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த பொதுமக்கள், வேடசந்தூா் எரியோடு சாலையில் காலிக் குடங்களுடன் வெள்ளிக்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூா் போலீஸாா், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் என உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். எனினும் காலை 8 முதல் 9 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தால், பணிக்குச் செல்லும் அலுவலா்கள், ஊழியா்கள், பள்ளி செல்லும் மாணவா்கள் என பலரும், பூத்தாம்பட்டி பகுதியை கடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி