அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் சரி செய்ய உத்தரவு

69பார்த்தது
அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் சரி செய்ய உத்தரவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பேருந்துகள் சேதமடைவது தொடர்பான புகார்கள் எழுந்தது. ஒரு சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் நகர பேருந்தின் நாற்காலி சாலையில் விழும் காட்சிகள் வெளியானது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழுவதுமான ஆய்வு செய்ய வேண்டும். பின்பு அந்த பேருந்தில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை உடனடியாக கண்டறிந்து அவற்றை அடுத்த 48 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி