ஊரை ஏமாற்றி படு சொகுசாக வாழ்ந்த தம்பதி

78பார்த்தது
ஊரை ஏமாற்றி படு சொகுசாக வாழ்ந்த தம்பதி
புதுச்சேரியை சேர்ந்த கோபி - வனிதா தம்பதி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அவர்களிடம் பணம் போட்ட கந்தன் என்பவர் சீட்டு முடிவடைந்தும் பணத்தை கேட்டும் தராமல் இருந்ததால் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்த போது இது போல 110 பேர் பணம் கொடுத்ததும் மொத்தமாக ரூ.1 கோடியே 31 லட்சத்தை ஏமாந்ததும் தெரியவந்தது. சீட்டு பணத்தில் கார், வீடு என ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இருவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி