சட்ட விரோதமாக மதுவிற்ற பெண் கைது

5542பார்த்தது
திண்டுக்கல் தோட்டனூத்து பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற பெண் உட்பட இரண்டு பேர் கைது.

திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில், சார்பு ஆய்வாளர் பிரபாகரன், சிறப்பு சார்பு ஆய்வாளர் சுகன்யா, ஏட்டு வனராஜன் ஆகியோர் தோட்டனூத்து, சிந்தலக்கூண்டு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மதியம் 1: 30 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக மது விற்ற மேட்டூரை சேர்ந்த சத்யராஜ், வடக்கு மாலப்பட்டியைச் சேர்ந்த சுமதி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி