சாணார்பட்டி அருகே வீட்டிலிருந்து இளம்பெண் மாயம்

2630பார்த்தது
சாணார்பட்டி அருகே வீட்டிலிருந்து இளம்பெண் மாயம்
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கோணப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் மனோரஞ்சிதம் (45). கூலித் தொழிலாளி. இவரது மூத்த மகள் மணிமேகலை (20) இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த நிலையில் காணவில்லை. இது குறித்து அவரது தாய் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால் சாணார்பட்டி போலீஸில் புகார் அளித்தார். சாணார்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேலுமணி வழக்குப் பதிவு செய்து காணாமல் போன மணிமேகலையை தேடி வருகிறார்.

தொடர்புடைய செய்தி