நத்தம் தாலுகாவில் 3 நாட்களுக்கு ஜமாபந்தி!

56பார்த்தது
நத்தம் தாலுகாவில் 3 நாட்களுக்கு ஜமாபந்தி!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நத்தம் தாலுகா அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும். ஜமாபந்தி நடைபெறும் நாட்களும், கிராமங்கள் குறித்த விபரம் பின்வருமாறு.
வரும் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ரெட்டியபட்டி வருவாய் உள்வட்டம், முளையூர், புன்னப்பட்டி, செல்லப்பநாயக்கன்ட்டி, இடையபட்டி சாத்தம்பாடி, ரெட்டியபட்டி, புதூர், லிங்கவாடி கிராமங்களுக்கும், 19-ஆம் தேதி புதன்கிழமையன்று செந்துறை உள்வட்டத்தைச் சேர்ந்த சிரங்காட்டுப்பட்டி, சேத்தூர், சிறுகுடி, கோட்டையூர், பிள்ளையார்நத்தம், குடகிப்பட்டி, செந்துறை கிராமங்களுக்கும், 20-ஆம் தேதி வியாழக்கிழமையன்று நத்தம் உள்வட்டத்தைச் சேர்ந்த சமுத்திராப்பட்டி, ஊராளிபட்டி, பூதகுடி, பாலப்பநாயக்கன்பட்டி, பாப்பாபட்டி, பண்ணுவார்பட்டி, ஆவிச்சிபட்டி, பன்னியாமலை, நடுமண்டலம், வேலம்பட்டி, நத்தம் ஆகிய கிராமங்களுக்கும் நடைபெறும்.
மேலே குறிப்பிட்ட கிராமத்தினர் அந்தந்த நாட்களில் நத்தம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலராக மாவட்டக் ஆட்சியர் தலைமையில் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு தீர்வு வழங்கப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களின் அனைத்து துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி