பெருமாள் கோயிலுக்கு ரூ. 30 இலட்சத்தில் புதிய தேர்

581பார்த்தது
பழனி பெருமாள் கோயிலுக்கு புதிய தேர்- 30 இலட்சத்தில் புதிய தேர் வழங்கப்பட்டது. புதிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகத்தினுடைய லட்சுமி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு பழனியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வகுமார் புதிய தேரை வழங்கினார்.

சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் 10 அடி அகலம், 15 அடி உயரத்தில் தேக்கு மரத்தால் செய்யப்பட்டுள்ளது. புதிய தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு நான்கு ரத வீதியில் தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது. பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சத்தியா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி