கஞ்சா விற்றவர் கைது!

4245பார்த்தது
நத்தம் அருகே செந்துறை பிரிவு சாலையில் பகுதியில் கஞ்சா விற்றவர் கைது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த பகுதியில் சனிக்கிழமை மதியம் 3 மணியளவில் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது செந்துறை பிரிவு சாலையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சிறுகுடி மேற்குத்தெருவை சேர்ந்த மூக்கையா (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி