4ஜி மற்றும் 5ஜி சேவைகள் இல்லாததால் கடும் சிரமம்!

83பார்த்தது
4ஜி மற்றும் 5ஜி சேவைகள் இல்லாததால் கடும் சிரமம்!
4ஜி மற்றும் 5ஜி சேவைகள் இல்லாததால் பொதுத்துறை பிஎஸ்என்எல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிட முடியவில்லை என அந்நிறுவன ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் பிஎஸ்என்எல்-ன் போட்டியால் தனியார் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தாமல் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

தொடர்புடைய செய்தி