தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று காலை கூடிய வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்குவதற்காக வந்திருந்தனர். இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 21, 000 வரை விற்பனையானது மேலும் சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 18 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரியில் தெரிவித்தனர்.