தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் ஒவ்வொருவரும் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்காக ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று பிப்ரவரி 16 காலை கூடிய ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதியிலிருந்துசோலை கொட்டாய், செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம், ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, ராஜா பேட்டை, லளிகம், தொப்பூர் போன்ற பகுதியில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 200 ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர் பொதுமக்கள் வியாபாரிகள் ஆடு வாங்க வந்திருந்தனர் இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 1500 தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 20000 வரை விற்பனையானது தர்மபுரியை சந்தை பேட்டை ஆட்டு சந்தையில் இன்று 22 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரிகள் தெரிவித்தனர்.