கிணற்றில் விழுந்த மான் மீட்பு

76பார்த்தது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தண்ணீர் தேடி வந்து வழி தவறி கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு





தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள குண்டல்மடுவு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்கு ஒரு புள்ளிமான் ஒன்று வழி தவறி கிருஷ்ணனின் விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
இதனை கண்ட கிருஷ்ணன் உடனடியாக பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க இது குறித்து தகவலறிந்து விரைந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக கிணற்றில் இறங்கி நீந்திக்கொண்டிருந்த ஆண் புள்ளி மானை சுமார் 1 மணி நேர மேலாக போராடி கயிறு கட்டி உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மானை மீட்ட வனத்துறையினர் அந்த புள்ளிமானை அருகில் உள்ள கவரமலை வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
துரிதமாக செயல்பட்டு
கிணற்றில் விழுந்த புள்ளி மானை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி கிராம மக்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி