பாலக்கோடு: 145 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

79பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி பேரூராட்சி சார்பில் அதிகாரிகள் இன்று மாரண்டஅள்ளி 4 ரோடு பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்த போது. அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை மடக்கி பிடித்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் இருந்தது தெரியவந்தது. சரக்கு வாகன டிரைவரை பிடித்து விசாரித்ததில் 4 ரோடு பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர் அன்சர் விற்பனை செய்தது தெரிய வந்தது. கடை மற்றும் வாகனத்தில் இருந்து 145 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக்பொருட்கள், சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் அன்சருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது இளநிலை உதவியாளர் சம்பத், தங்கராஜ், துப்புரவு பணி மேற்பார்வையாளர் தேன்மொழி, வடிவேலு கோவிந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி