தர்மபுரி: தவெக பொது செயலாளர் தொண்டர்களுக்கு அழைப்பு

56பார்த்தது
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விழுபுரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று மாலை தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் தபா சிவா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை குறித்து தமிழகம் மட்டுமல்ல உலக நாடுகளே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை விளக்க மாநாடாக இது அமையும். இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்கள் மகளிர் உள்ளிட்ட துணை அமைப்பினர் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும். தொண்டர்கள், குடும்பத்தோடு அணி அணியாக வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி