மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய செங்குந்த மகாஜன சங்கத்தினர்

64பார்த்தது
தர்மபுரி மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு மற்றும் தொழிற்கல்வி படிக்கும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தர்மபுரி நெசவாளர் நகர் செங்குந்தர் திருமண மஹாலில் இன்று செப்டம்பர் 29 காலை நடைபெற்றது. விழாவுக்கு சங்க மாவட்ட தலைவர் டி சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் ஆசிரியர் சச்சிதானந்தம் வரவேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர் அன்பு சதாசிவம் உறுதிமொழி வாசித்தார்.

முன்னாள் பேரூராட்சி தலைவர் மாசிலாமணி, பாப்பாரப்பட்டி தொழிலதிபர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் செங்குந்தர் மகாஜன சங்க மாநில தலைவர் கே. பி. கே. செல்வராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்கள், ஊக்கப் பரிசு மற்றும் உதவி தொகைகளை வழங்கி பேசினார். மேலும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. சங்க பொதுச் செயலாளர் குமரகுருபரன், பொருளாளர் காந்தி, சேலம் மாவட்ட தலைவர் சடையப்ப முதலியார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் வாழ்த்தி பேசினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி