கடையடைப்பு போராட்டம் திமுகவினர், பாமகவினர் வாக்குவாதம்

76பார்த்தது
தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று அக்டோபர் 4 பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டி நடந்த அரைநாள் கடைஅடைப்பு போராட்டத்தை எதிர்த்து பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தின் முன் வணிகர்களுக்கு ஆதரவாக திமுக பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் திமுகவினர் பாமக கட்சியை சார்ந்த முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி மற்றும் பாமக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பின இடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தி இரு தரப்பினரையும் கலைந்து போக செய்தனர் இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி