வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்

85பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் வனக் கோட்ட உதவி வனப்பாதுகாவலர் சரவணன், மொரப்பூர் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் இன்று அரூர் முதல் சிந்தல்பாடி செல்லும் வனச்சாலையில் உள்ள காப்புக் காட்டில், அரூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மூலம் இன்று, பிளாஸ்டிக் கழிவுகள் முற்றிலும் அகற்றி தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் மொரப்பூர் பிரிவு வனவர் விவேகானந்தன், மற்றும் வனத்துறை ஊழியர்கள் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி