நாய்கள் துரத்தியதில் பள்ளிவாசலுக்குள் புகுந்த மான்

57பார்த்தது
தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள வனப்பகுதியில் அதிகளவில் மான்கள், காட் டெருமை, மயில்கள், காட்டுப்பன்றிகள் உள்ளன. அரூர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள வனப் பகுதியிலிருந்து, நேற்று மதியம் 12: 00 மணிக்கு, 2 வயதுடைய ஆண் புள்ளிமான், இரை தேடி மஜீத் தெருவிற்கு வந்தது. அதை, நாய்கள் துரத்தியதால் பள்ளி வாசலுக்குள் புகுந்தது. பின்னர் வனத் துறையினர் மானை மீட்டு சென்றனர். கடந்த இரு மாதங்களில் வனப்பகுதியிலிருந்து, அரூர் நகருக்குள் வந்த, இரண்டு மான்களை நாய்கள் கடித்ததில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி