நெல்லை வைர மாளிகை ஹோட்டல் முன்பு கடந்த 20ஆம் தேதி பிரபல ரவுடி தீபக் ராஜா படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கொலையாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் 7 நாட்களுக்கு பிறகு தீபக் ராஜா உடலை பெற குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். சாதி ரீதியிலான மோதலே தீபக் ராஜா கொலைக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.