தீபக் ராஜா கொலை: இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு சிக்கல்!

18713பார்த்தது
தீபக் ராஜா கொலை: இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு சிக்கல்!
நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் கடந்த 20ஆம் தேதி பட்டப்பகலில் ரவுடி தீபக் ராஜா (31) என்பவர் 6 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். 6 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்த நிலையில் 5 பேர் நேற்று (மே 24) கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தீபக் ராஜா கொலை வழக்கில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிப்பிட்டு சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு, சக மனிதனை படுகொலை செய்யும் சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வழங்கிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு மற்றொரு தரப்பினர் ஒரு சமூகத்தை ஒட்டு மொத்தமாக குற்றவாளிகளாக சித்தரித்து சாதிய மோதலை தூண்டுகிறார் என எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டி விடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் பரமக்குடி டி.எஸ்.பி.யிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி