தண்டவாளத்தில் சிலிண்டர்.. பெரும் விபத்து தவிர்ப்பு

55பார்த்தது
தண்டவாளத்தில் சிலிண்டர்.. பெரும் விபத்து தவிர்ப்பு
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லந்தாரா மற்றும் தந்தேரா ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் சிலிண்டர் கிடந்துள்ளது. அவ்வழியாக சென்ற சரக்கு ரயில் லோகோ பைலட் ஒருவர் இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து ரூர்க்கி ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் சிலிண்டரை எடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி