கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இன்று இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை மூன்று முறை பங்குனி மாத ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்டம் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களிலும் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.