போக்குவரத்திற்கு லாயக்கற்ற தார்சாலை.

50பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாசார்-காஞ்சிராங்குளம் செல்லும் தார் சாலை உள்ளது இந்த தார்சலை பல மாதங்களாக சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது.

தினந்தோறும் பல வாகனங்கள் மற்றும் கால்நடை மேய்ப்பாளர்கள் உட்பட பலரும் இந்த சாலையை பயன்படுத்துவது வழக்கம் இந்த நிலையில் சேதமடைந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகிறார்கள்.

மேலும் இச்சாலையை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி