பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு.

75பார்த்தது
பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு.


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த செவ்வேரி, மேலூர், ஏ அகரம் ஆகிய பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் இன்றைய நிலை குறித்து தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் அவர்கள்வாழ்வதற்கு சொந்த இடம் இல்லாமல்பெரும் சிரமப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது இதன் அடிப்படையில் இன்று திட்டக்குடி வட்டாட்சியரை சந்தித்து வாழ்வாதாரத்தை இழந்து தங்குவதற்கு வீட்டுமனை இல்லாமல் இருப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி