வெங்கடாம்பேட்டை: கதண்டை அகற்ற கோரிக்கை

69பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவில் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் கதண்டு பெரிய அளவில் கூடு கட்டி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயத்துடன் பயணம் செய்து வருகின்றனர். இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி