சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பேட்டி

73பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே. எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி காலம் பொற்காலமாகும். தமிழகத்தில் அனைத்து அணைகளையும் கட்டியவர் காந்தியும், காமராஜரும் ஆவர். இவர்கள் இருவரும் தமிழகத்தில் மது விலக்கில் உறுதியாக இருந்தனர். தமிழகம் வளர வேண்டும் என்றால் மது ஒழிய வேண்டும் என்றார் காமராஜர்.

கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுவிற்கு எதிராக மாநாட்டை நடத்துகின்றனர். இதில்எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. அதை நாங்கள் வரவேற்கிறோம். இதில் அரசியல் கிடையாது. ஒரு நல்ல சமூக காரியத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் எம்பி தொடங்கி வைத்துள்ளார் இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி