தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு கூட்டம்

70பார்த்தது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பாக கடலூர் மாவட்டம் B. முட்லூர் மர்கஸில் வைத்து மாவட்ட செயற்குழு நடைபெற்றது.

இச்செயற்குழுவை மாவட்டத் தலைவர் M. சாஜிதுர் ரஹ்மான் தலைமை தாங்கி நடத்தினார். இக்கூட்டத்தில் ஆரம்பமாக இறையச்சம் என்ற தலைப்பில் TNTJ பேச்சாளர் நெல்லை மைதீன் உரை நிகழ்த்தினார். இதன் பிறகு கிளைகள் செய்த செயல்பாட்டு அறிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக மாவட்ட மாணவரணி செயலாளர் முஹம்மது ஃபஹத் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கலப்பற்ற முறையில் அழைப்புப்பணி செய்வோம்.! என்ற தலைப்பில் TNTJ மாநில செயலாளர் செய்யது முஹம்மத் உரை நிகழ்த்தினார். பிறகு மாவட்ட நிர்வாகிகள், துறை வாரியாக கிளை நிர்வாகிகளுக்கும், பேச்சாளர்களுக்கும் கிளை நிர்வாகத்தின் கணக்கு வழக்குகள், அடுத்தகட்ட செயல்பாடுகள் மற்றும் காவல்துறை அணுகுமுறைகள் தொடர்பாக ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு கிளைகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. மேலும் மண்டல தர்பியா தொடர்பாகவும் அழைப்பு விடுக்கப்பட்டது. பிறகு மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் சிறந்து செயல்பட்ட கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி