சவுக்கு சங்கர் மீது புகார்.. நஷ்ட ஈடு கேட்கும் புள்ளி

583பார்த்தது
சவுக்கு சங்கர் மீது புகார்.. நஷ்ட ஈடு கேட்கும் புள்ளி
மாலிக் ஸ்ட்ரீம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த மாலிக் தஸ்தகீர்-க்கும், போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கும் இடையே தொடர்பு இருப்பதாக, சில YouTube சேனல்களில் ஒன்றில் கருத்து வெளியிடப்பட்டது. இதைஎதிர்த்து தொழில் அதிபர் மாலிக் தஸ்தகீர், போலீசில் புகார் அளித்துள்ளார்.அதில், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பும் ஆதன் தமிழ் மீடியா பிரைவேட் லிமிடெட், மாதேஷ், வராகி, சவுக்கு சங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி