கேரளாவில் பரவும் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக – கேரளா எல்லையான வாளையார் உள்ளிட்ட 12 சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பண்ணைகளில் வாத்துகள் அடுத்தடுத்து இறந்த நிலையில் சோதனை நடத்தப்பட்டது. அதில் எச்5 என்1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கேரளா மாநிலத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பறவை காய்ச்சல் எதிரொலியாக தமிழக கேரளா எல்லையில் 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.